அரசு டெண்டர்களில் கலந்து கொள்ள சீன நிறுவனங்களுக்கு தடை போடுங்க… சீன பொருட்களை பாய்காட் பண்ணுங்க…

 

அரசு டெண்டர்களில் கலந்து கொள்ள சீன நிறுவனங்களுக்கு தடை போடுங்க… சீன பொருட்களை பாய்காட் பண்ணுங்க…

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, அந்நாட்டு நிறுவனங்கள் அரசு டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரான் மன்ச் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதேசி ஜர்க்ரான் மன்ச் அமைப்பின் இணை அமைப்பாளர் அஷ்வானி மஹாஜன் கூறியதாவது:

அரசு டெண்டர்களில் கலந்து கொள்ள சீன நிறுவனங்களுக்கு தடை போடுங்க… சீன பொருட்களை பாய்காட் பண்ணுங்க…

மக்கள் சீன தயாரிப்புகளை தவிர்க்க இதுதான் சரியான நேரம். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றம் இதர பிரபலங்கள் சீன தயாரிப்புகளை ஊக்குவிக்க கூடாது. இந்திய அரசால் வழங்கப்படும் எந்தவொரு டெண்டரிலும் சீன நிறுவனங்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். எந்தவொரு சீன பொருட்களையும் கொள்முதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு டெண்டர்களில் கலந்து கொள்ள சீன நிறுவனங்களுக்கு தடை போடுங்க… சீன பொருட்களை பாய்காட் பண்ணுங்க…

கடந்த திங்கட்கிழமையன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் நடந்தது. கம்பிகள் மற்றும் கற்களை கொண்டு சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இந்திய வீரர்களும் பதிலுக்கு அவர்களை தாக்கினர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். சீன தரப்பிலும் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல். நம் ராணுவ வீரர்கள் பலியான செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.