நடத்தையில் சந்தேகம்… மனைவி உள்பட மூவர் மீது ஆசிட் வீசிய, கணவர்!

 

நடத்தையில் சந்தேகம்… மனைவி உள்பட மூவர் மீது ஆசிட் வீசிய, கணவர்!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அசோக் நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ரவி (50). இவரது மனைவி மாலா (49). இவருக்கும், தூத்துக்குடி பி.அன்.டி காலனியை சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ரவி, மாலாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சூசை மச்சாது மற்றும் அவரது மகன் கெர்பின் (19), ஆகியோர் ரவி வீட்டிற்கு வந்து மாலாவுடன் பேசி கொண்டிருந்து உள்ளனர்.

நடத்தையில் சந்தேகம்… மனைவி உள்பட மூவர் மீது ஆசிட் வீசிய, கணவர்!

அப்போது, அங்கு வந்த ரவி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர், வீட்டில் வைத்திருந்த லாரிக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து மாலா, சூசை மற்றும் கெர்பின் ஆகியோர் மீது ஊற்றியுள்ளார். இதில், கெர்பின் மற்றும் சூசை மச்சாது ஆகியோரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல், மாலா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, தூத்துக்குடி சிப்காட் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய ரவியை தீவிரமாக தேடி வருகின்றனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி உள்பட மூவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.