சுஷாந்த் விவகாரம்… கடிதம் கிடைத்தது! – சுப்பிரமணியன் சுவாமிக்கு மோடி பதில்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அனுப்பிய கடிதம் கிடைத்தது என்று மோடி பதில் அளித்துள்ளார்.
வாரிசு நடிகர்கள் அழுத்தம் காரணமாக எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
தன்னைப் போல மற்றவர்களும் பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Dr Subramanian @Swamy39 had written letter dr 15th July 2020 to @narendramodi @PMOIndia on the mysterious death of Actor Sushant Singh Rajput & asked for CBI investigation, Now Namo by letter dt 20th July has acknowledged the letter pic.twitter.com/1updoiWQFq
— Jagdish Shetty (@jagdishshetty) July 25, 2020
இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதம் ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜூலை 15ம் தேதி தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.