சின்னத்திரை நடிகரை தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்

 

சின்னத்திரை நடிகரை தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்

சென்னையில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோரை வீடுபுகுந்து தாக்கியதாக சூர்யாதேவி என்பவர் மீது புகார் எழுந்துள்ளது.

சின்னத்திரை நடிகரை தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்


தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் சின்னத்திரை நடிகை சீபா என்பவருடன் சேர்ந்து யூடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தார். அப்போது தனது ஆட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யாதேவி, அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

சின்னத்திரை நடிகரை தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்

இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் பேசிய நாஞ்சில் விஜயன், வனிதா விஜயகுமார் திருமணத்தின்போது சூர்யாதேவிக்கும், வனிதாவுக்கும் இடையே யூடியூப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தான் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி சூர்யாதேவி தங்களை தாக்கியதாவும் பதிவிட்டு இருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகரை தாக்கியதாக சூர்யாதேவி மீது புகார்