போஸ்டர் போரில் சூர்யா ரசிகர்கள்! “சமூக பிரச்னைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்”

 

போஸ்டர் போரில் சூர்யா ரசிகர்கள்! “சமூக பிரச்னைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்”

மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின் திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என்பன போன்ற போஸ்டர்களை அனுதினமும் ஒட்டி வைரலாக்கிவருகின்றனர். இதனால் போஸ்டர் அரசியல் மதுரையில் ட்ரெண்டாகி வருகிறது.

போஸ்டர் போரில் சூர்யா ரசிகர்கள்! “சமூக பிரச்னைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்”

இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துள்ளனர். முன்னதாக ‘திரையுலகை ஆண்டது போதும்… தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே…!’ என்று போஸ்டர் அடித்து ஒட்டினர். தற்போது நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் மீதுள்ள மதிப்பு ரசிகர்களிடம் ஒரு பங்கு கூடியுள்ளது. நீட் தேர்வு குறித்த கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு மதுரை சூர்யா ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். “திரைப்பட வசனங்களில் மட்டும் குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல, சமூகபிரச்னைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன்” என்ற வசனங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். #baned Neet exam இன்று மட்டும் 3 பேர்… நாளை எத்தனை பேரோ? என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.