ஸ்ரேயாஷுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றி… விரைவில் கம்பேக்… டெல்லி அணி உற்சாகம்!

 

ஸ்ரேயாஷுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றி… விரைவில் கம்பேக்… டெல்லி அணி உற்சாகம்!

இந்தியா-இங்கிலாந்து இடையே மூன்று விதமான தொடர்கள் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய வென்றது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அப்போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின்போது ஃபீல்டிங் செய்யும் போது டைவ் அடித்த ஸ்ரேயாஷ் ஐயரின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பெவிலியன் திரும்பி சிகிச்சை மேற்கொண்டார்.

Image

இச்சூழலில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் இடது தோள்பட்டை இடமாறியிருப்பது தெரியவந்துள்ளது. காயத்திலிருந்து மீள்வதற்கு பல வாரங்கள் பிடிக்கும் என்பதால் ஐபிஎல் தொடரிலும் அவரால் ஆடமுடியவில்லை. இதனிடையே ஸ்ரேயாஷ் ஐயருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் நலம் விசாரித்து ட்வீட் செய்துவந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்த ஸ்ரேயாஷ், விரைவில் மீண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார்.

தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. “நான் களத்திற்கு கூடிய விரைவில் திரும்புவேன். உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி!” என்று குறிப்பிட்டு அறுவைச் சிகிச்சை முடிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரேயாஷ் வரும் வரை டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை பண்ட் ஏற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் அணிக்கு ஸ்ரேயாஷ் திரும்புவார் என்பதால் அணி நிர்வாகம் உற்சாகத்தில் இருக்கிறது.