நள்ளிரவு வெளியாகிறது சூர்யாவின் ‘சூரரை போற்று’: உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

நள்ளிரவு வெளியாகிறது சூர்யாவின் ‘சூரரை போற்று’: உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சூரரைப் போற்று’. கொரோனா பரவலால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திரையுலகினர் பலர் கோரிக்கை விடுத்தும், அவர் முடிவில் மாற்றம் இல்லை என அறிவித்துவிட்டார்.

நள்ளிரவு வெளியாகிறது சூர்யாவின் ‘சூரரை போற்று’: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதை தொடர்ந்து அக்.30ம் தேதி ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்திற்கான தடையில்லா சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆனதால், அக்.12 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்படத்தின் ‘காட்டு பயலே, வெய்யோன் சில்லி’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்தது.

நள்ளிரவு வெளியாகிறது சூர்யாவின் ‘சூரரை போற்று’: உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரரை போற்று ஓடிடியில் வெளியாக உள்ளது. கடந்த மாதமே வெளியாகவிருந்த இந்த படம், தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.