“தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் சூரப்பா” – எம்.பி சுப்பராயன்

 

“தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் சூரப்பா” – எம்.பி சுப்பராயன்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சுப்பராயன் தெரிவித்தார்.

“தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் சூரப்பா” – எம்.பி சுப்பராயன்

தர்மபுரியில் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, அண்ணா பல்கலை.யில் நடைமுறையில் உள்ள மாணவர்கள் உரிமைகள், நன்மைகள் எதுவும் பறிபோகக் கூடாது என்றும், முன்புள்ள 69% இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் அப்படியே தொடர வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். மேலும், மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏழை, எளிய தொழிலாளர்களின் நலனை கருதி தமிழகத்தில் உடனடியாக பொதுபோக்குவரத்தை 100% அளவுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார்.

“தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் சூரப்பா” – எம்.பி சுப்பராயன்