“தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் சூரப்பா” – எம்.பி சுப்பராயன்
Oct 16, 2020, 19:55 IST1602858324000
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சுப்பராயன் தெரிவித்தார்.
தர்மபுரியில் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, அண்ணா பல்கலை.யில் நடைமுறையில் உள்ள மாணவர்கள் உரிமைகள், நன்மைகள் எதுவும் பறிபோகக் கூடாது என்றும், முன்புள்ள 69% இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் அப்படியே தொடர வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். மேலும், மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஏழை, எளிய தொழிலாளர்களின் நலனை கருதி தமிழகத்தில் உடனடியாக பொதுபோக்குவரத்தை 100% அளவுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார்.