“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொதுத்தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஆந்திரா தவிர்த்து உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரகண்ட், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடந்த முறை விசாரணையின்போது, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும்,
தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடவிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையைத் தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மாணவர்களுக்குத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

“ஜூலை 31 தான் கடைசி… அதற்குள் +2 தேர்வு ரிசல்ட் வரனும்” – அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விசாரித்த பிறகு உத்தரவு பிறப்பித்த நீதிபதி அமர்வு, அனைத்து மாநிலங்களும் மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும், தேர்வு முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியது. சிபிஎஸ்இ 10, 11, 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டியே அனைத்து மாநிலங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும்.