‘பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரம்’ : உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

 

‘பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரம்’ : உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

‘பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரம்’ : உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் சேர்த்தது. ஆளுநரின் முடிவை அடுத்து 7 பேர் விடுதலை குறித்து முடிவு செய்யப்படும்.

‘பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரம்’ : உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லாததால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலைக்காகப் பல போராட்டங்கள், சுற்றுப் பயணம், மனு அளித்தல் போன்றவற்றைச் செய்து வருகிறார். 

‘பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரம்’ : உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி!

இந்நிலையில் பேரறிவாளன் கருணை மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “MDMA இறுதி அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. MDMA இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது. அவ்வாறு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தால் MDMA குறித்த ஆவணங்களை ஆளுநரிடம் தந்து தெளிவுபடுத்தினீர்களா என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் பேரறிவாளன் விடுதலை கோரி தற்போது தொடர்ந்த வழக்கை வருகிற 23ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.