சாத்தான்குளம் கொலை வழக்கு… ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் தொடர்பாக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

சாத்தான்குளம் கொலை வழக்கு… ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் தொடர்பாக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றூ சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடுமையாகத் தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்தனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கு… ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் தொடர்பாக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்தது. அதன்பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. கடந்த செப்டம்பரில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

சாத்தான்குளம் கொலை வழக்கு… ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் தொடர்பாக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இச்சூழலில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீதர் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த மனுவில், “இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் ஸ்ரீதர், தப்பிச்செல்லும், சாட்சியங்கள் ஆதாரங்களைக் கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. அதைக் கருத்தில் கொள்ளாமல் மதுரைக் கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ மற்றும் தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.