சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை! சன் பிக்சர்ஸ் நிறுவனம், சீரியல் நடிகை போலீசில் புகார்

 

சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை! சன் பிக்சர்ஸ் நிறுவனம், சீரியல் நடிகை போலீசில் புகார்

சன்பிக்சர்ஸ் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் வசிக்கும் துணை நடிகை சரளா என்பவர் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார். அதில், “தான் பேஸ்புக் மூலம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். உடனடியாக அதில் உள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு கேட்ட போது சன் பிக்சர்ஸ் மேலாளர் சுரேஷ் என்பவர், ஆபாசமாக பேசினார். இதுகுறித்து நான் சன்டிவி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது உள்ளே அனுமதிக்கவில்லை” என்று புகாரில் தெரிவித்துள்ளார். மாறாக சன் பிக்சர்ஸ் நிறுவனம், கமிஷனர் அலுவலகத்தில் புகாரை ஆன்லைன் மூலம் கொடுக்கும்படி தெரிவித்தது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “சரளா எங்களுடைய அலுவலகம் வந்தார். அவர் வைத்திருந்த ஆடியோவை ஆய்வு செய்த போது அது சுரேஷ்ஷின் குரல் இல்லை. சுரேஷ் என்பவர் எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனால் மொபைலில் இருந்தது அவரது குரல் இல்லை. எங்களது நிறுவனத்திற்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள். மோசடியில் ஈடுபட முயல்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.