14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்!

 

14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்!

வெப்ப சலனம் மற்றும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தர்மபுரி,கிருஷ்ணகிரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்!

நாளை தர்மபுரி ,கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வருகின்ற 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்!

வருகின்ற 5ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி ,கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருப்பத்தூர் ,வேலூர் ,ராணிப்பேட்டை ,திருவள்ளூர் ,சென்னை,கடலூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பகல் பொழுதில் வானம் தெளிவாகவும் , மாலைப்பொழுது மற்றும் இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.