நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!

 

நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!

மதுரை

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்ககோரி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் இன்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்!

அப்போது, கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவையை உடனடியாக துவக்கவும், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 22 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனகூறி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் ஆலை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்..