கொரோனாவால் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் நிதியுதவி

 

கொரோனாவால் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் நிதியுதவி

திருப்பத்தூர்

ஆம்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தேமுதிக நிர்வாகியின் குடும்பத்திற்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆறுதல் கூறி நிதயுதவி வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆம்பூர் நகர தேமுதிக செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று வெங்கடேசன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொரோனாவால் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி குடும்பத்திற்கு எல்.கே.சுதீஷ் நிதியுதவி

இதனை அடுத்து, தேமுதிக மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், இன்று வெங்கடேசனின் வீட்டிற்கு நேரில் அவரது தாய் சரசு அம்மாள் மற்றும் மனைவி தீபா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், கட்சி சார்பில் வெங்கடேசனின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிதியையும் வழங்கினார். இந்த நிகழ்வின் போது, திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.