பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

 

பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

இந்திய-சீன பிரச்சினையில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக நிற்போம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த தினங்களுக்கு முன் தெரிவித்தார். உடனே காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரான பிரியங்கா காந்தி, சில எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவிக்கப்படாத பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர் என கிண்டல் செய்து இருந்தார். பிரியங்கா காந்தியின் கருத்து முதிர்ச்சியற்றது மற்றும் குழந்தைதனமானது என பகுஜன் சமாஜ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளர் சுதின்ற பாடோரியா இது தொடர்பாக கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவிக்கப்படாத பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர் என பிரியங்கா காந்தி தெரிவித்தது முதிர்ச்சியற்றது மற்றும் குழந்தைதனமான கருத்து. இந்த வகை அரசியலை தவிர்க்கவேண்டும். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நான் நம்புகிறேன், அவர் விரைவில் புரிந்து கொள்வார். எல்லைகளை பாதுகாப்பது இன்று நாட்டிற்கான சவால் மற்றும் இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம்.

பிரியங்கா காந்தியின் கருத்து முதர்ச்சியற்றது, குழந்தைத்தனமானது.. வெளுத்து வாங்கிய பகுஜன் சமாஜ் கட்சி

நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கு முக்கியமானவை. இந்த பாடத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரிடம் இருந்து கற்றுக்கொண்டோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களின்போது நாம் கட்சி அரசியலை தாண்டி மேலே வர வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் முழு நாடும் மற்றும் எதிர்க்கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.