உடுமலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஆசிரியை…

 

உடுமலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஆசிரியை…

திருப்பூர்

உடுமலை அருகே சாலையில் ஓடும் காரில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியர் கவிதா. இவர் நேற்று தனது காரில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். உடுமலை வட்டாரப் போக்குவரத்து அவலுவலகம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேற தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு உடனடியாக வெளியேறினார்.

உடுமலையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஆசிரியை…

அப்போது திடீரென காரில் தீப்பற்றி எரிய தொடங்கி, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சாலையில் கார் தீப்பற்றி எரிவதை கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அவர்கள் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.