சாலையில் விழுந்த திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

சாலையில் விழுந்த திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சாலையில் விழுந்த திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

10 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட இந்த பள்ளத்தை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சுப்ரமணியபுரம் போலீசார், பள்ளத்தின் அருகே தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்து மாற்றம் செய்தனர்.

சாலையில் விழுந்த திடீர் பள்ளம் : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். இங்கு தண்ணீர் வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்றும் அது வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதால் இங்கு அதிர்வு தாங்காமல் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து இருக்கலாம்என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூடும் பணியானது இரவுக்குள் முடிந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.