சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும்!

 

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும்!

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று ரயில்வே துறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறியுள்ள அவர், சென்னை மாநகரில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் பயண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகள் ரயிலில் பயணம் ,மேற்கொள்ளும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும்!

கொரோனா காரணமாகக் கடந்த 5 மாத காலமாக பொது போக்குவரத்து முடங்கியிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் தாராள தளர்வுகள் அளிக்கப்பட்டுக் கடந்த 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக 2 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது .

சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும்!

இருப்பினும் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள மக்கள் மின்சார ரயில்கள் இல்லாததால், அவதிப்பட்டு வருகிறனர். இதன் காரணமாகத் தான் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.