“போலீஸ்காரியான என்னையே பலமுறை பலாத்காரம் பண்றியே” -காதலில் விழுந்த பெண் எஸ். ஐ. க்கு நேர்ந்த நிலை

 

“போலீஸ்காரியான என்னையே பலமுறை பலாத்காரம் பண்றியே” -காதலில் விழுந்த பெண் எஸ். ஐ. க்கு நேர்ந்த நிலை


ஒரு பெண் எஸ். ஐ.அவரது காதலன் மூலம் ப்ளாக் மெயில் செய்யப்பட்டு பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்

“போலீஸ்காரியான என்னையே பலமுறை பலாத்காரம் பண்றியே” -காதலில் விழுந்த பெண் எஸ். ஐ. க்கு நேர்ந்த நிலை


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மொராதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 25 வயதான ஒரு பெண், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் .அவருக்கும் அங்குள்ள காவல் பயிற்சியாளர் ஒருவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது .இந்நிலையில் அந்த பெண் எஸ். ஐ .பலமுறை அந்த பயிற்சியாளருடன் உல்லாசமாக இருந்துள்ளார் .மேலும் அவரோடு பலமுறை டேட்டிங் சென்றுள்ளார் .அப்போதெல்லாம் அவர்கள் உல்லாசமாக இருக்கும் காட்சியை அந்த காதலன் வீடியோ எடுத்து வைத்துள்ளார் .அதன் பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுவதாக கூறி அவரை ப்ளாக் மெயில் செய்து உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் கல்யாணம் செய்து கொள்ள கேட்டபோது அதற்கும் சம்மதம் தெரிவிப்பது போல நடித்து மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார் .
ஆனால் நாளடைவில் அந்த காதலன் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த அந்த பெண் போலீஸ் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது .இந்நிலையில் அந்த பெண் போலீசின் கல்யாணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த காதலன் அவரை மீண்டும் அந்த வீடியோவை காமித்து கல்யாணத்தை நிறுத்த சொல்லி மிரட்டியுள்ளார் .இதனால் மனமுடைந்த அந்த பெண் போலீஸ் அதிகாரி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் .
அதன் பிறகு அவரின் சகோதரர் அந்த பெண்ணின் காதலன் மீது தனது சகோதரியின் மரணத்திற்கு அவர் தான் காரணமென்று போலீசில் புகார் தந்தார் .மேலும் அவர் தன்னுடைய சகோதரிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் கூறினார் .இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

“போலீஸ்காரியான என்னையே பலமுறை பலாத்காரம் பண்றியே” -காதலில் விழுந்த பெண் எஸ். ஐ. க்கு நேர்ந்த நிலை