மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன்… உறவினர்கள் தாக்கியதில் படுகாயம்!

 

மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன்… உறவினர்கள் தாக்கியதில் படுகாயம்!

திண்டுக்கல்

கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காதலனை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் உள்ள கல்லூரியில் படித்து வரும் இவருக்கு, இனஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. மேலும், காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த நிலையில், மகளின் காதல் விவகாரம் அறிந்த மாணவியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலன்… உறவினர்கள் தாக்கியதில் படுகாயம்!

இதனை அறிந்த மேகநாதன், மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால், அவரது திருமணம் நின்றுவிட்டது. மகளின் திருமணம் நின்றதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மாணவி மூலம் அவரை அழைத்துச் செல்ல வரும்படி மேகநாதனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை நம்பி, மேகநாதன், தனது நண்பர்களுடன் மாணவியை அழைத்துச் செல்ல கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு திரண்டிருந்த கிராம மக்கள், மேகநாதனை சரமாரியாக தாக்கினர்.

இதனை கண்ட, அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த மேகநாதனை, போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆபாச புகைப்படங்களை பகிர்ந்தது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.