சிவகங்கை: ஆன்லைன் வகுப்பில் படிக்கச் சொன்னதால் மாணவி தற்கொலை!

 

சிவகங்கை: ஆன்லைன் வகுப்பில் படிக்கச் சொன்னதால் மாணவி தற்கொலை!

ஆன்லைன் வகுப்பில் படிக்கும் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்லைன் வகுப்பில் படிக்கச்சொல்லி பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள செல்லபனேந்தல் கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 15வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.