தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபடுங்கள் : கே.எஸ்.அழகிரி பேச்சு!

 

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபடுங்கள் : கே.எஸ்.அழகிரி பேச்சு!

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபடுங்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபடுங்கள் : கே.எஸ்.அழகிரி பேச்சு!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் போதே திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தது. அந்த வகையில் இன்றும் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஒன்றுபட்டு இருந்தாலும் சில நேரங்களில் கருத்து வேறுபாடு காரணமாக உட்கட்சி பூசல்கள் நிகழ்கின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபடுங்கள் : கே.எஸ்.அழகிரி பேச்சு!

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுக்க வேண்டும்.காங்கிரஸ் கட்சியினருக்கு அதற்கு குறைந்த எந்த இலக்கும் இருக்கக் கூடாது. திமுக கூட்டணியில் இருக்கும் போது எப்படி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என சிலருக்கு சந்தேகம் வரலாம். கூட்டணியில் இருக்கக்கூடிய காரணத்தினால் நாளை நாம் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது இல்லை.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.