‘அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை’ : கவுண்டமணி எச்சரிக்கை!

 

‘அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை’ : கவுண்டமணி எச்சரிக்கை!

கவுண்டமணி உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை’ : கவுண்டமணி எச்சரிக்கை!

பிரபல காமெடி மன்னன் கவுண்டமணி உடல்நிலை குறித்து இணையதள சேனல் ஒன்று வதந்தி பரப்பும் விதமாக செய்தி வெளியிட்டு இருந்தது . அதில் கவுண்டமணியின் உடல்நிலை பின்னடைவு என்றும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியிருந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கவுண்டமணியின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கவுண்டமணி நலமுடன் இருக்கிறார். யூ டியூப்பில் நடிகர் கவுண்டமணி அவர்களைப் பற்றி வதந்தீயை கிளப்பி உள்ளனர். அது உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இது போல் தவறான செய்தியை பரப்பும் அந்த நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று கவுண்டமணி கூறியுள்ளார். அவர்களே அந்த யூடியூப்பில் உள்ள கவுண்டமணி பற்றிய தவறான தகவலை உடனடியாக நீக்கவில்லை என்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.