ஸ்டெதஸ்கோப் – பூணூல் : தஞ்சையில் மாணவர்கள் நூதன போராட்டம்

 

ஸ்டெதஸ்கோப் – பூணூல் : தஞ்சையில் மாணவர்கள் நூதன போராட்டம்

திரிசூலம், ஸ்டெதஸ்கோப், பூணூல் ஏந்தி தஞ்சையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக நூதன போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெதஸ்கோப் – பூணூல் : தஞ்சையில் மாணவர்கள் நூதன போராட்டம்

கையில் திரிசூலம் ஏந்தி அதில் ஸ்டெதஸ்கோப் மற்றும் பூணூலை மாற்றி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த அவர்களை காவல்துறையினர் தடுப்புக்கள் வைத்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

ஸ்டெதஸ்கோப் – பூணூல் : தஞ்சையில் மாணவர்கள் நூதன போராட்டம்

போராட்டக்காரர்கள் காவல்துறையினரை தள்ளி விட்டு ஓடிச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவுகள் மீது ஏறி உள்ளே நுழைய முற்பட்டனர் . அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இழுத்து வந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காவல்துறையினரும், மாணவர்களும் கீழே விழுந்தனர். இதற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது