ஸ்டாலின் இதுமாதிரி வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் – பாஜக

 

ஸ்டாலின் இதுமாதிரி வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் – பாஜக

இன-மத-மொழி ஒடுக்குமுறைகளால் அல்லல்படும் மக்கள் அடைக்கலம் தேடிவரும் மதச்சார்பற்ற மக்களாட்சி நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தாய்த்திருநாடு! நம்பிவரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்க மதமும் இனமும் தடையாக இருக்கலாமா? CAA2019-ஐ இரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் இதுமாதிரி வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் – பாஜக

நம்பிவரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்க மதமும் இனமும் தடையாக இருக்கலாமா? என்ற முதல்வரின் கேள்விக்கு, நம்பி வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க உங்களின் மலிவான அரசியல் தடையாக இருக்கலாமா? என்று கேட்கிறது பாஜக.

தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இஸ்லாமிய மத ஒடுக்குமுறைகளால் அல்லல்பட்ட நம் மக்கள் அடைக்கலம் தேடி வந்ததாலேயே, வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற நாடான இந்தியா CAA2019 கொண்டு வந்தது. அதை ரத்து செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்து, நம்பி வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்க உங்களின் மலிவான அரசியல் தடையாக இருக்கலாமா? என்று கேட்கிறார்.

ஸ்டாலின் இதுமாதிரி வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் – பாஜக

சிஏஏ சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் முதல்வர் ஸ்டாலின் சொன்னது குறித்து, சிஏஏ சட்டம் என்றால் என்ன என்ற அடிப்படை புரிதல் இல்லாத விமர்சனம். இது பிரிவினையின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மீறல் என்பதையும், 70 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்டிருக்க வேண்டியது என்பதை உணராமல் மத அடிப்படைவாதத்தால் பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும், ஆஃப்கானிஸ்தானிலும் அல்லல்பட்ட மக்கள் அவர்களின் தாய்நாட்டிலேயே குடியுரிமை பெற ஒளியேற்றும் சட்டம் என்பதும் புரியாமல், ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதற்கு உதவி துரோகம் செய்தவர்கள், இங்குள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் தாய் நாட்டில் தங்கள் சொந்தங்களோடு வாழ்க்கையை தொடர்வதற்கு தடையாகவும், அங்கு எஞ்சியுள்ள மேலும் பல லட்சம் தமிழர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வண்ணம் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்கிறார் நாராயணன் திருப்பதி.

ஸ்டாலின் இதுமாதிரி வெளியிடுவது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் – பாஜக

CAA சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அகதிகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களின் மதவாதச் செயல். 2019 இறுதியில் நடத்தப்பட்டது போல் மதவெறி போராட்டங்களை தூண்டும் தீய நோக்கோடு கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா.