கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிப்பு; மு.க ஸ்டாலின் கண்டனம்

 

கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிப்பு; மு.க ஸ்டாலின் கண்டனம்

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது கவித்துண்டு அணிவித்த சம்பவமும் நடந்தது.

கன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிப்பு; மு.க ஸ்டாலின் கண்டனம்

இவ்வாறு மறைந்த தலைவர்களை அவமதிப்பு செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருக்கும் அண்ணா சிலை மீது பழைய பல்பு, மாலை, காவிக் கொடி அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அண்ணா சிலை அவமதிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், காவிக்கொடி அணிவித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்திற்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம் என்றும் தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் என்றும் தெரிவித்துள்ளார்.