“ஸ்டாலின் மதுரை எய்ம்ஸில் சிகிச்சை பெறலாம்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 

“ஸ்டாலின் மதுரை எய்ம்ஸில் சிகிச்சை பெறலாம்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் ஸ்டாலின் சிகிச்சை பெறலாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் மதுரை எய்ம்ஸில் சிகிச்சை பெறலாம்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்காதது பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பியது கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழக அரசின் செயல்பாடுகளை தவறான கண்ணோட்டத்தோடு ஸ்டாலின் மக்களிடம் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்கு செல்வதைவிட விருப்பப்பட்டால் விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் ஸ்டாலின் சிகிச்சை பெறலாம் என்றார்.

“ஸ்டாலின் மதுரை எய்ம்ஸில் சிகிச்சை பெறலாம்” : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இதனிடையே புதுக்கோட்டையில் திமுகவின், ‘தமிழகத்தை மீட்போம்’ கூட்டத்தில் காணொலி வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் , தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும், ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக ‘எய்ம்ஸ்’ நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்கள் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.