முடிவுக்கு வந்த சிக்கல்… காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் இவர் தான்!

 

முடிவுக்கு வந்த சிக்கல்… காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் இவர் தான்!

சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேர்வாகியுள்ளார்.

முடிவுக்கு வந்த சிக்கல்… காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் இவர் தான்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது. இதில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த சூழலில் சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் குழு தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு என்ற போட்டி நிலவி வந்தது.

இது குறித்து ஆலோசிக்க இரண்டு முறை கூட்டம் கூட்டப்பட்ட நிலையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் சட்டமன்றக் குழுத் தலைவராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் துணை தலைவராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவிக்கு நிலவி வந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது.