கொரோனா முன்கள பணியாளர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி மரியாதை… கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்…

 

கொரோனா முன்கள பணியாளர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி மரியாதை… கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்…

கோவை

கோவையில் இன்று 13-வது கோவை தின விழாவினை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையொட்டி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் முன்கள பணியாற்றிய, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா முன்கள பணியாளர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி மரியாதை… கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்…

அதனை தொடர்ந்து, திறந்த வெளியில் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். இதனால் சுகாதார பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.