சிட்னி டெஸ்ட்டை மிஸ் செய்யும் ரோகித் ஷர்மா; குழந்தையை பார்க்க இந்தியா பறந்தார்!!!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மா – ரித்திக்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் ஷர்மா – ரித்திக்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்குஇடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அடிலெய்ட், மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெறும் கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 3-1என்ற கணக்கில் வெல்ல இந்திய அணி மும்முரமாக இருக்கிறது.
Update – Rohit Sharma to join ODI squad on 8th January
India batsman @ImRo45 left for Mumbai on the 30th of December to attend to his wife who has delivered a baby girl. The BCCI congratulates Rohit on the beginning of a new chapter in his life. pic.twitter.com/7jokivuLGT
— BCCI (@BCCI) December 31, 2018
இந்நிலையில், இந்திய வீரர் ரோகித் ஷர்மா – ரித்திக்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையை காண, மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்ற கையுடன் அவர் மும்பைக்கு பறந்து விட்டார். எனவே, கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மா இடம் பெறமாட்டார் எனவும், அடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 4-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறக்கூடும் என தவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 106 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.