பரிசாக வந்த கார்… பயிற்சியாளருக்கு அன்பளிப்பு – நெகிழ வைத்த சேலம் நடராஜன்!

 

பரிசாக வந்த கார்… பயிற்சியாளருக்கு அன்பளிப்பு – நெகிழ வைத்த சேலம் நடராஜன்!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பினார் சேலத்தைச் சேர்ந்த நடராஜன். டிவில்லியர்ஸ், தோனி என வரிசையாக ஜாம்பவான்களைக் காலி செய்து பேமஸ் ஆனார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையையும் பெற்றார். இதன்மூலம் அவர் சர்வதேச இந்திய அணிக்குள் நுழைந்தார். அப்போதே தன்னுடைய வெற்றிக்கு முழுமுதற் காரணம் பயிற்சியாளர் ஜெயபிரகாஷ் என்றார். ஆஸ்திரேலியா டூருக்கு அணியுடன் நெட் பவுலராக சென்ற நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்க அதிலும் தான் யாரென்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

பரிசாக வந்த கார்… பயிற்சியாளருக்கு அன்பளிப்பு – நெகிழ வைத்த சேலம் நடராஜன்!

இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி தீர்த்தது. கோலியு வெற்றிக் கோப்பை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்தார்.இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முக்கியமான இக்கட்டான ஆட்டத்தில் எல்லாம் நடராஜனை அணிக்குள் கொண்டுவந்து வெற்றிகளைத் தேடிக் கொண்டார் கேப்டன் கோலி.

Image


இச்சூழலில் ஆஸ்திரேலியாவில் அசத்திய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பிரபல மஹிந்திரா நிறுவனத்தின் ஆனந்த் மஹிந்திரா கார் பரிசாக அளிக்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். சொன்னபடியே வீரர்கள் அனைவருக்கும் காரைப் பரிசாக அளித்தார். நடராஜன் தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய காரை தனது வெற்றிக்குக் காரணமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை கொண்டாடி வருகின்றனர். நன்றி மற