ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலிக்கு பதிலாக ரோகித் ஷர்மா கேப்டன்!
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதையடுத்து 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா அணி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, சாகல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்பிரிட் பும்ரா, ஷர்துள் தாகூர், கலீல் அகமது
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடுவுக்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பி உள்ளார்.