உலக கோப்பை - இன்றைய போட்டியில் இந்தியா-தென் ஆப்ரிக்கா மோதல்!

 
INDvsSA

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 36 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி இந்திய அணி 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.   

IND

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 37வது லீக் போட்டியில் இந்தியாமற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே இரண்டு அணிகளும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டிகளின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும் முதல் இடத்திற்கான போட்டியில் இரண்டு அணிகளும் உள்ளன. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ளும். தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறும்.