ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? - இன்று அரையிறுதி போட்டி

 
INDvsAUS

இன்று நடபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. 

இந்த நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. துபாய் மைதானத்தில் இன்று நடபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அந்த தோல்விக்கு இந்திய அணி இன்று பழிதீர்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.