#IPL2024 சென்னை பிளே ஆஃப்க்கு செல்வதில் சிக்கல்
![Ipl](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/05c42bdae3d7033a94bad9cbe4487eba.jpeg)
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் பவர் பிளே வான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை சேர்த்தது குஜராத் அணி. சாய் சுதர்சன் 32 பந்துகளிலும் சுப்மன் கில் 25 பந்துகளிலும் அரைசதத்தை அடித்தனர்.தொடர்ந்து அசத்திய அவர்கள் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் , கில் 104 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது.
232 என்ற கடின இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ரச்சின்,ரஹானே,ருத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பிறகு வந்த டேரி மிச்சல் மற்றும் மொயின் அலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். மிச்சல் 63 ரன்னிலும்,மொயின் அலி 56 ரன்னிலும் ஆட்டமிழக்க போட்டி முழுவதுமாக குஜராத்தின் பக்கம் சென்றது.20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வியடைந்த சென்னை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.