நாளை நடைபெறுகிறது அரையிறுதி போட்டி - இந்தியா மற்று நியுசிலாந்து அணிகள் மோதல்!

 
IndvsNZ

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 

IND

இந்த நிலையில், நாளை முதல் அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல் 16ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன