இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

 

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றம் செய்யப்பட்டது. இசன் கிசான் மற்றும் காதர் நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் மற்றும் ராகுல் சாகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரோகித் 10 ரன்களிலும் ராகுல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Image

தனது அறிமுக போட்டியில் அசத்திய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடி காட்ட இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது. சூரியகுமார் யாதவ் 57 ரன்களிலும் , ஸ்ரேயாஸ் 37 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எட்டியது.

பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி அசத்திய பட்லர் இந்த போட்டியில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார், மலன் 14 ரன்களிலும் ராய் 40 ரன்களில் ஆட்டமிழக்க , பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களிலும் , கேப்டன் மோர்கன் 4 ரன்களிலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட ஆர்ச்சர் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றியுடன் தொடரை சமன் படுத்தியுள்ளது நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.