ரன்களை ஓடி எடுக்காமல் சிக்சர்களை அடிக்கவே பயிற்சி செய்து வருகிறேன் - தோனி பேச்சு!

 
Dhoni

ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன் என சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். 

நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போட்டி நிறைவடைந்த பின்னர் சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது: டெல்லி உடனான போட்டி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பந்து நன்றாக திரும்பியது. ஜடேஜா மற்றும் மொயின் அலி பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம். ருதுராஜ் கெய்க்வாட் அரிதான வீரர்களில் ஒருவர். ரன்களை பெரும்பாலும் ஓடி எடுக்காமல் சில சிக்சர்களை அடிப்பதே தனது பணி. ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே,  திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன். விளையாட்டில் எதைப் பெற முடியும் என்பதுதான் நான் உண்மையில் பயிற்சி செய்கிறேன், எனவே இது எனக்குச் செயல்பட உதவுகிறது. இவ்வாறு கூறினார்.