இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா..!

 
1

பிசிசிஐ செயலர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் இந்திய அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மிகவும் த்ரில்லிங்காக நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையையும், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது