அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? : தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

 
rsa vs pak

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும். 

SA

இன்று சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டு வெற்றி, ஒரு முடிவில்லை என  5 புள்ளிகளுடன் உள்ள  தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்றாலும் கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதுமானது. பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி,  2 தோல்வி என  2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். இது போன்று நடந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரைஇறுதி கதவு திறக்கும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். ஆகையால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.