3வது டி20 போட்டி- சூரியகுமார் யாதவ் அபார சதம், 229 ரன்கள் குவித்து அசத்தல்

 
Suryakumar Yadav having no limit in T20I

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Image

துவக்காட்டக்காரராக களம் இறங்கிய இசான் கிசன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர், 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 

அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 45 பந்துகளில் சதம் அடித்த அசத்தினார். சர்வதேச டி20 அரங்கில் அவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.சுப்மன் கில் 46 ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 112 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

230 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி ஆடி வருகிறது.ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என்ற சம நிலையில் உள்ளது. எனவே தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.