டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் - சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு இல்லை

 
SRI vs IRE

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இன்றைய இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை அணி : அவிஷ்கா பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா உள்ளிட்டோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.