ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

 
SRIvsPAK

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் நடைபெற்றது. இதில்  பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. பாகிஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பாபர் ஆசம் 30 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிசாங்கா 55 ரன்கள் குவித்தார். ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்திற்கு இந்த இரு அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்று விட்ட நிலையில்,  இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்தது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது.