சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - பிவி சிந்து சாம்பியன்

 
PV Sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை வாங் லியியை வீழ்த்தி இந்திய வீராங்கனை பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார்.  வியட்நாம் வீராங்கனை துய் லின் குயேனுடன் மோதிய பிவி சிந்து 19-21, 21-19, 21-18. என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து  காலிறுதி சுற்றில்  சீனாவின் ஹான் யூவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார். பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதனிடையே நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில், அதில் ஜப்பான் வீராங்கனை சாயினா கவாகாமியுடன் பிவி சிந்து மோதினார். இந்த போட்டியில் 21க்கு 15 , 21க்கு 7 என்ற செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.  

PV Sindhu

இந்நிலையில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த வாங் லியியுடன் பிவி சிந்து மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 21க்கு 9 11க்கு 21, 21க்கு 15 என்ற செட் கணக்கில் வாங் லியியை வீழ்த்தி பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டர் தொடரில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.