திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

 
Trichy

திருச்சி விமான நிலையத்தில் துபாய் மற்றும் கோலாலம்பூரில் இருத்தது கடத்திவரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ள விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் இது தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அதில்  517.500 கிராம் கடத்தல் தங்கம் இருத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் துபாயில் இருந்து திருச்சி வந்த  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது பயணி ஒருவரின் உடமையில் 526.500 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 34 லட்சத்து 72 ஆயிரத்து 613 ரூபாய் ஆகும். மொத்தமாக சுமார் ஆயிரம் கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2 ஆண் பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.