டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ரோகித் சர்மா - இங்கிலாந்து பேட்டிங்

 
toss

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில், 12ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதல் இதனிடையே கடந்த 14ம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில்,  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்டு டிராஃப்ட் மைதானத்தில் தொடங்கியது. இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என தொடரில் சமநிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்க் செய்து விளையாடவுள்ளது. 

team india

இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், விராட் கோலி,  சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, முகமது சிராஜ், சஹால், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், லியம் லிவிங்ஸ்டன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொயின் அலி, கிரைய்க் ஒவர்டான், டேவிட் வில்லே, ப்ரைடான் கார்ஸ், ரீஸ் டாப்லே உள்ளிட்டோர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.