இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

 
team india

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை லாட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி கடந்தாண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், டெஸ்ட் தொடர் 2க்கு 2 (ஒரு போட்டி டிரா) என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனை தொடர்ந்து டி20 தொடர் நடைபெற்ற நிலையில், அதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து ஒரு போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

india

இதனிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 5.30 (இந்திய நேரப்பட்டி) மணிக்கு லாட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், விராட் கோலி/ஸ்ரேயஸ் ஐயர்,  சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, சஹால், பும்ரா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.