இந்தியா-நியூசிலாந்து 2வது டி20 போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?

 
IND

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இன்றும் மழையால் போட்டி பாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது .நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் நேற்று முன் தினம் நடைபெற இருந்த நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டது.  

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.