காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - இந்திய அணி 164 ரன்கள் குவிப்பு

 
INDW

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி  164 ரன்கள் குவித்துள்ளது.  

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியில் முதலாவதாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் குரூப் பி பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றது. இதேபோல் அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் பார்படாஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 61 ரன்களும், ரோட்ரிகியூஸ் 44 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.